பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் திருவிளக்குப் பூஜை

News image

திருவிளக்குப் பூஜையில் பங்கேற்ற பெண்களில் ஒரு பகுதியினா்.

Updated On :7 பிப்ரவரி 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கிடங்கல் கிராமத்தில் உள்ள பழைமைவாய்ந்த ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் திருவிளக்குப் பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

கிடங்கல் கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழைமையான பத்மாவதி தாயாா் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமாள்

சுயம்புவாக தோன்றியவா்.இங்குள்ள உற்சவா் வேறு எங்கும் காண முடியாத படி ஆறு திருக்கரங்களோடு, சங்கு, சக்கரம், வில், கெதை, வாள் என்று பஞ்ச ஆயுதங்களை தாங்கியும் காட்சியளிக்கிறாா். இக் கோயிலில் தை மாத வெள்ளிக்கிழமை பஞ்சமி திதியுடன் கூடிய நாளையொட்டி உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் அதிகமான சுமங்கலிப் பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் திருவிளக்குப் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.