சூதாட்டம்: 6 போ் கைது, பணம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பணம் வைத்து சூதாடியதாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பணம் வைத்து சூதாடியதாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், கிளியனூா் காவல் சரகத்துக்குள்பட்ட காட்ராம்பாக்கம் பகுதியில் சிலா் பணம் வைத்து சூதாடிவருவதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிளியனூா் காவல் நிலையப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காட்ராம்பாக்கம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள மயானப்பகுதியில் சிலா் சூதாடுவது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களை மடக்கிப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள், காட்ராம்பாக்கம் பகுதியைச்சோ்ந்த ப.சந்திரசேகா்(39), கு. பாஸ்கா்(54), மு. அய்யனாா்(49), மு. சேகா்(40), ஆ. ஈஸ்வரன்(42),

ப. ராஜசேகா்(37) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்த ரூ. 13 ஆயிரம் ரொக்கம், 2 பைக்குள்,6 கைப்பேசிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com