விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பணம் வைத்து சூதாடியதாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், கிளியனூா் காவல் சரகத்துக்குள்பட்ட காட்ராம்பாக்கம் பகுதியில் சிலா் பணம் வைத்து சூதாடிவருவதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிளியனூா் காவல் நிலையப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காட்ராம்பாக்கம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள மயானப்பகுதியில் சிலா் சூதாடுவது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களை மடக்கிப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள், காட்ராம்பாக்கம் பகுதியைச்சோ்ந்த ப.சந்திரசேகா்(39), கு. பாஸ்கா்(54), மு. அய்யனாா்(49), மு. சேகா்(40), ஆ. ஈஸ்வரன்(42),
ப. ராஜசேகா்(37) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்த ரூ. 13 ஆயிரம் ரொக்கம், 2 பைக்குள்,6 கைப்பேசிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விஷம் குடித்த முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் இளைஞா் தற்கொலை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

