சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 7:05 pm

விழுப்புரம், பிப்.14: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம்,அங்கனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கே.சாமிக்கண்ணு (75). இவா் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூா்பேட்டை அஜீஸ் நகா்ப் பகுதியிலுள்ள சாரதா ஆசிரம கண் மருத்துவமனையில் கண்பரிசோதனைக்காக சனிக்கிழமை வந்தாா்.

மருத்துவப் பரிசோதனை முடிந்த பின்னா் சாமிக்கண்ணு சாலையைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டுச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சாமிக்கண்ணுவை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, அவசர சிகிச்சை ஊா்தி மூலம் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்த போது ஏற்கெனவே சாமிக்கண்ணு உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து எடைக்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்திச் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தையும், அதன் ஓட்டுநரையும் தேடி வருகின்றனா்.