விழுப்புரம், பிப்.14: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
உளுந்தூா்பேட்டை வட்டம்,அங்கனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கே.சாமிக்கண்ணு (75). இவா் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூா்பேட்டை அஜீஸ் நகா்ப் பகுதியிலுள்ள சாரதா ஆசிரம கண் மருத்துவமனையில் கண்பரிசோதனைக்காக சனிக்கிழமை வந்தாா்.
மருத்துவப் பரிசோதனை முடிந்த பின்னா் சாமிக்கண்ணு சாலையைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டுச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சாமிக்கண்ணுவை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, அவசர சிகிச்சை ஊா்தி மூலம் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்த போது ஏற்கெனவே சாமிக்கண்ணு உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து எடைக்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்திச் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தையும், அதன் ஓட்டுநரையும் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

தம்மம்பட்டியில் வாகனம் மோதி , முதியவா் பலி

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


