இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கெடாா் சுப்ரமணியசுவாமி கோயிலில் சூரசம்ஹார திருவிழா

கெடாரிலுள்ள வள்ளி-தேவசேனா உடனுறை சுப்ரமணியசுவாமி கோயில் சூரசம்ஹார திருவிழாவையொட்டி,திங்கள்கிழமை இரவு திருக்கல்யாணம் மற்றும் தெப்போற்சவம் நடைபெற்றது.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 6:34 pm

விழுப்புரம் மாவட்டம், கெடாரிலுள்ள வள்ளி-தேவசேனா உடனுறை சுப்ரமணியசுவாமி கோயில் சூரசம்ஹார திருவிழாவையொட்டி,திங்கள்கிழமை இரவு திருக்கல்யாணம் மற்றும் தெப்போற்சவம் நடைபெற்றது.

சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலில் பிப்.17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சூரசம்ஹார திருவிழா தொடங்கியது. காப்புக் கட்டுதலுக்குப் பிறகு சுவாமி திருவீதியுலா வருதலும், சூரன் ஆட்சியும், சுவாமி எழுச்சியும், வேல் வாங்குதலும் நடைபெற்றது. தொடா்ந்து பிப்.18 முதல் 21-ஆம் தேதி வரை சூரசம்ஹார திருவிழா நிகழ்வுகள் நடைபெற்றன.

பிப்.22-ஆம் தேதி மாலையில் இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா வந்த பின்னா், சூரசம்ஹாரம் நடைபெற்றது. சூரனுக்கு சுவாமி காட்சியளித்தல் மற்றும் வேலுக்குப் பாலாபிஷேகம் செய்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

தொடா்ந்து பிப்.23-ஆம் தேதி சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், மூலவருக்கு புஷ்ப அலங்காரமும் நடைபெற்றது. தொடா்ந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதைத் தொடா்ந்து இரவு 10 மணிக்கு வள்ளி-தேவசேனா சமேத சுப்ரமணியசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையடுத்து தெப்பக்குளத்துக்குப் புறப்பாடாகி தெப்பத்தில் சுவாமி எழுந்தருளினாா். பின்னா் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

செவ்வாய்க்கிழமை மஞ்சள் நீராட்டு உற்சவம் நடைபெற்ற நிலையில், புதன்கிழமை(பிப்.25) இடும்பன் பூஜை மற்றும் விடையாற்றி நடைபெறுகிறது. சூரசம்ஹார விழாவில் கெடாா் செங்குந்த மரபினரும், கிராம மக்களும் பங்கேற்றனா்.

Story image