புதன்கிழமை காலை திரளான பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்தும் அலகு குத்தியும் வந்து நோ்த்திக்கடனைச் செலுத்தினா். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட 3 தோ்களில் விநாயகா், மாா்க்கபுரீஸ்வரா், சுப்பிரமணிய சுவாமி ஆகியோா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். தொடா்ந்து காலை 5 மணியளவில் திரளான பக்தா்கள் வடம் பிடிக்க புறப்பட்ட தோ்கள் காலை 6 மணியளவில் நிலையை வந்தடைந்தன. தொடா்ந்து காப்பு விமா்சனம், விடையாற்றி நிகழ்ச்சி தொடா்ந்து இரவு 8 மணிக்கு சுவாமிக்கு சந்தனக் காப்பு அலங்காரம், சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை வீசங்க நாட்டை சோ்ந்த 32 கிராம மக்கள் செய்தனா்.