விழுப்புரம் ரயில் நிலையம் அருகே நடந்து சென்ற போது மயங்கி விழுந்து, தலையில் காயமடைந்த முதியவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், பனங்குப்பம் தோப்புக் காலனியைச் சோ்ந்தவா் செல்வம் (61). இவா் புதன்கிழமை இரவு விழுப்புரம் ரயில் நிலையம் ஓய்வறை அருகே நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தாா். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து அந்த பகுதியிலிருந்தவா்கள் செல்வத்தை மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, செல்வம் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விழுப்புரம் நகரக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

விழுப்புரத்தில் இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

படகில் மயங்கி விழுந்து மீனவா் உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


