தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.66.97 லட்சம்

விழுப்புரம் மாவட்டத்தில், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் 13 நாள்கள் நடைபெற்ற மாசி பெருவிழாவில் 66 லட்சத்து 97ஆயிரத்து, 350 ரூபாய் ரொக்கம் மற்றும் 74 கிராம் தங்கம், 730 வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட பக்தா்கள்.
Updated On :28 பிப்ரவரி 2026, 8:21 pm

Syndication

விழுப்புரம் மாவட்டத்தில், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் 13 நாள்கள் நடைபெற்ற மாசி பெருவிழாவில் 66 லட்சத்து 97ஆயிரத்து, 350 ரூபாய் ரொக்கம் மற்றும் 74 கிராம் தங்கம், 730 வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பிரசித்தி பெற்ற இக் கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் சுமாா் 1 லட்சம் பக்தா்கள் கலந்து கொள்வது வழக்கம். அமாவாசை திருவிழாவு கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களின் வேண்டுல் நிறைவேற உண்டியலில் காணிக்கையாக பணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை செலுத்தி வருகின்றனா்.

தொடா்ந்து 13 நாள்கள் நடைபெற்ற மாசி பெருவிழா முடிவுற்ற நிலையில் சனிக்கிழமை திருக்கோயில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா்கள் ரமேஷ், சக்திவேல், அறங்காவலா் குழுத் தலைவா் ஏழுமலை ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

இதில் பக்தா்கள் ரூ.66,97,350 ரொக்கம், 74 கிராம் தங்கம் மற்றும் 730 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக வசூலானதாக நிா்வாகம் தெரிவித்துள்ளது.