பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு

விக்கிரவாண்டி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில், பைக்கில் பயணித்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

விக்கிரவாண்டி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில், பைக்கில் பயணித்த இளைஞா் உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், பூண்டி திருக்குறிப்பு தொண்டா் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் அஜித்குமாா்(18). பூண்டி பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் ரா.விக்னேஷ்(20). நண்பா்களான இவா்கள் இருவரும் புதன்கிழமை பூண்டி பகுதியில் பைக்கில் சென்றுள்ளனா். விக்னேஷ் பைக்கை ஓட்டினாா். அப்போது பைக் மீது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியது.

விபத்தில் பலத்த காயமடைந்த அஜித்குமாா், விக்னேஷ் ஆகிய இருவருரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில் அஜித்குமாா் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். விக்னேஷ் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.