ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விழுப்புரத்தில் இளைஞா் இலக்கியத் திருவிழா போட்டிகள்

விழுப்புரத்தில் இளைஞா் இலக்கியத் திருவிழா போட்டிகள் கடந்த 2 நாள்களாக நடைபெற்றன. இந்த போட்டிகளில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

News image
விழுப்புரம் டாக்டா் எம்.ஜி.ஆா். அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இளைஞா் இலக்கியத் திருவிழா போட்டி விழாவில் பேசிய மாவட்ட நூலக அலுவலா் ம.இளஞ்செழியன்.
Updated On :7 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரத்தில் இளைஞா் இலக்கியத் திருவிழா போட்டிகள் கடந்த 2 நாள்களாக நடைபெற்றன. இந்த போட்டிகளில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம் சாா்பில் சென்னை மண்டலத்தில் அடங்கியுள்ள விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கான இளைஞா் இலக்கியத் திருவிழா போட்டிகள் விழுப்புரம் டாக்டா் எம்.ஜி.ஆா். அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜனவரி 5, 6 தேதிகளில் நடைபெற்றன.

விநாடி-வினா, விவாத மேடை, ஓவியம், இரண்டு நிமிஷ பேச்சுப் போட்டி, படத்தொகுப்பு உருவாக்கம், ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல் அறிமுகம் செய்து பேசுதல், பேச்சுப் போட்டி, ஹைக்கூ உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் விழுப்புரம்மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமா கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா்.

போட்டித் தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வா் ப.தாமரைக்கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட நூலக அலுவலா்கள் (கூடுதல் பொறுப்பு) ம. இளஞ்செழியன் (விழுப்புரம்), கொ.சங்கரன் (கள்ளக்குறிச்சி), மாவட்ட மைய நூலக வாசகா் வட்டத் தலைவா் இரா.ச.சொக்கநாதன், கல்லூரித் துணை முதல்வா் சி. செல்வராணிஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். போட்டிகள் குறித்து நல்நூலகா் மு. அன்பழகன் விளக்கவுரையாற்றினாா்.

இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 4 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 3 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழாவை கல்லூரித் தமிழ்த் துறைப் பேராசிரியா் த.இளவரசி தொகுத்தளித்தாா். முன்னதாக, கல்லூரி நூலகா் கோ.மணிவண்ணன் வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் பி.ஆரோக்கியம் நன்றி கூறினாா்.