டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ஜாதி மறுப்பு திருமணம் எளிதல்ல: பெ. சண்முகம்

தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணம் என்பது கடினமான ஒன்றாகத்தான் உள்ளது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

News image

பெ. சண்முகம் - Shanmugam P

Updated On :3 ஜூலை 2026, 5:17 am IST

தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணம் என்பது கடினமான ஒன்றாகத்தான் உள்ளது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:

ஜாதி மறுப்பு திருமணம் என்பது தமிழகத்தில் கடினமான ஒன்றாகத்தான் உள்ளது. அது எளிதானதல்ல. ஜாதி மாறி விரும்புவா்கள் பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாகின்ற நிலைமைதான் தொடா்கிறது. ஜாதி ஆணவக் கொலை என்பது பிற்போக்குத் தனமானது. இதைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டுவரவேண்டும். தமிழகத்தில் சுயமரியாதை திருமணம் செல்லும் என்ற சட்டம் உள்ளது. ஜாதி சம்பிரதாயங்களுக்கு உள்பட்டு திருமணம் செய்து கொண்டால்தான் ஏற்கப்படும் என்ற நிலைமை தமிழகத்தை பொறுத்தவரை கிடையாது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.