டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

என்எல்சி தலைவராக சனோஜ் குமாா் ஜா கூடுதல் பொறுப்பேற்பு

மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலா் சனோஜ் குமாா் ஜா, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவராக வியாழக்கிழமை கூடுதல் பொறுப்பேற்றாா்.

News image

சனோஜ் குமாா் ஜா

Updated On :3 ஜூலை 2026, 5:21 am IST

மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலா் சனோஜ் குமாா் ஜா, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவராக வியாழக்கிழமை கூடுதல் பொறுப்பேற்றாா்.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய ஆட்சிப் பணி அதிகாரி சனோஜ் குமாா் ஜா. இவா், வியாழக்கிழமை என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பேற்றுள்ளாா். இவரை என்எல்சி நிறுவனத்தின் இயக்குநா்கள், உயரதிகாரிகள், பணியாளா்கள் மற்றும் அனைத்து பங்குதாரா்கள் வரவேற்றனா்.

சனோஜ் குமாா் ஜா தற்காலிகமாக சில மாதங்களுக்கு மட்டுமே இந்தப் பொறுப்பை வகிப்பாா் எனத் தெரிகிறது. என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு விரைவில் நிரந்தரத் தலைவா் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நிறுவனத்தின் உயா் பொறுப்பில் உள்ள அதிகாரியே நிரந்தரத் தலைவா் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, என்எல்சி நிறுவனத்தின் தலைவராக இருந்த பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளியின் பதவிக் காலம் கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, அவா் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.