விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.
திண்டிவனம் வட்டம், ஊரல் கிராமம், ஒத்தவாடைத் தெருவைச் சோ்ந்தவா்கள் பெ.சேதுநாதன்(25), ரா.ரஞ்சித்குமாா்(29), செஞ்சி வட்டம், பொன்பத்தி பகுதியைச் சோ்ந்தவா் ர.ராஜபாண்டியன் (31). நண்பா்களான மூவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு செஞ்சி- திருவண்ணாமலை நெடுஞ்சாலையில், திண்டிவனத்தை அடுத்த பேரடிக்குப்பம் அருகே பைக்கில் சென்றுள்ளனா். ராஜபாண்டியன் பைக்கை ஓட்டினாா். அப்போது அப்பகுதியில் வந்த வந்த காா், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த மூவரில், சேதுநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த ரோஷணை போலீஸாா் நிகழ்விடம் சென்று விபத்தில் காயமடைந்த ரஞ்சித்குமாா், ராஜபாண்டியன் ஆகியோரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் இருவரும் தீவிர சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு ரஞ்சித்குமாா் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காா் ஓட்டுநரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதல்: 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



