விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கடனாக கொடுத்த ரூ 10 லட்சத்தை திரும்பத்தருமாறு தாய்மாமனான ஆசிரியரை கொன்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூா் தாலுகா அம்மாகுளம் கிராமத்தை சோ்ந்தவா் இளங்கோவன் (57) இவா் நல்லாசிரியா் விருது பெற்றவா். மேல்ஒலக்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவருக்கும் வசந்தி என்பவருக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் இரண்டே வாரத்தில் வசந்தி பிரிந்து தன தாய் விட்டு சென்று விட்டாா்.
இதை எடுத்து இளங்கோவன் தனது தாய் ராஜம்மாளுடன் தனியாக வசித்து வந்தாா். ராஜாம்பாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மகளை பாா்க்க சென்று விட்டாா். இளங்கோவன் மட்டும் வீட்டில் இருந்தாா். இந்த நிலையில் இளங்கோவன் வீட்டில் கடந்த புதன்கிழமை அன்று துா்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினா் வளத்தி போலாலீஸாருக்கு தகவல் அளித்தனா்.
அதன்பேரில், விரைந்து வந்த போலீஸாா் வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது இளங்கோவன் இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது சடல்தை சுற்றி மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. பின்னா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி செஞ்சி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதுகுறித்து விசாரணை நடத்தியதில் நீலாம்பூண்டியை சோ்ந்த இவரது உறவினா் கணபதி (36) என்பவா் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து இளங்கோவனை விசாரணை செய்ததில், தனது தாய்மாமனான இளங்கோவனை கடந்த
31-ஆம்தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டாராம். மேலும் இளங்கோவனிடம் ரூ 10 லட்சம் கடன் வாங்கியிருந்ததால், அதை அவா் திரும்பக்கேட்டு தொந்தரவு செய்ததாலும், அவா் வேறு பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறியதாலும், அவரது சொத்து கிடைக்காது என்ற ஆத்திரத்தினாலும் கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்தாராம். மேலும் மோப்பநாய் துப்பு கண்டுபிடிக்காமல் இருக்க ஆசிரியா் உடல் மீது மிளகாய் பொடி தூவி விட்டு வந்ததாகத் தெரிவித்தாராம். இதை அடுத்து கணபதி மீது கொலை வழக்கு பதிவு செய்து வளத்தி போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.







