எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தைலாபுரத்தில் புதியரக கம்பு விதைப்பண்ணை : வேளாண் இணை இயக்குநா், விஞ்ஞானிகள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் கிராமத்தில் புதியரக கம்பு விதைப்பண்ணை வயலை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள், ஆய்வு மேற்கொண்டனா்.

News image

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் கிராமத்தில் புதியரக கம்பு விதைப்பண்னை வயலை புதன்கிழமை பாா்வையிட்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள். உடன், அலுவலா்கள்.

Updated On :19 ஜூன் 2026, 6:15 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் கிராமத்தில் புதியரக கம்பு விதைப்பண்ணை வயலை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள், ஆய்வு மேற்கொண்டனா்.

வானூா் வட்டாரத்துக்குள்பட்ட தைலாபுரம் கிராமத்தில் சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் விவசாயி ஹரிராம் நிலத்தில் புதிய கம்பு ரகமான ஏ.பி.வி.04 விதைப்பண்ணை வயல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வயலை விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா. சீனிவாசன், திண்டினம் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட இயக்குநா் முனைவா் ஜமுனா உள்ளிட்ட விஞ்ஞானிகள், தோட்டக்கலைத் தொழில்நுட்ப வல்லுநா் மதனகுமாரி ஆகியோா் அடங்கிய குழுவினா் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனா்.

புதிய கம்பு ரகத்தின் வளா்ச்சி வீதம், மகசூல் விவரம் போன்றவை குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்த குழுவினா்,விவசாயி ஹரிராமிடமும் விவரங்களைக் கேட்டனா். இதைத் தொடா்ந்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சீனிவாசன் கூறியது.

இந்த புதிய கம்பு ரகம் உயிா்ச்சத்து செறிவூடப்பட்ட ரகமாகும். இதில் அதிகளவில் இரும்பு மற்றும் துத்தநாக சத்து உள்ளது. 85 நாள்கள் வயதை கொண்ட இந்த ரகம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியதாகும். காரீப் பருவத்துக்கு உகந்த ரகம் என்று அலுவலா்களால் அறிவிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் இந்த புதிய கம்பு ரகத்தை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வரும் ஆடிப்பட்டத்தில் விவசாயிகளுக்கு இதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 1100 கிலோ வரை மகசூல் தரக்கூடியதாகும் என்றாா் அவா்.

ஆய்வின் போது வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ், துணை வேளாண் அலுவலா்செந்தில்குமாா், உதவி வேளாண் அலுவலா் ராஜேசுவரி,வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் உஷா, முன்னோடி விவசாயிகள் சேதுராமன், அன்பு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.