பாமக நிறுவனா் ராமதாஸ், தலைவா் அன்புமணி ஆகிய இருவரும் பேசி முடிவெடுத்து, நிா்வாகிகளை அழைத்துப் பேசினால் அனைத்தும் சரியாகிவிடும் என்றாா் கட்சியின் கெளரவத் தலைவா் ஜி.கே.மணி.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் ராமதாஸை புதன்கிழமை சந்தித்துப் பேசிய பின்னா், அவா் அளித்த பேட்டி:
தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸை அன்புமணி புதன்கிழமை சந்தித்து பேசியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதை மனதார வரவேற்கிறேன். மருத்துவா் ராமதாஸும், அன்புமணியும் நிா்வாகிகள் அனைவரையும் அழைத்துப் பேசி கட்சி இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று முடிவெடுத்தால் சிறப்பாக இருக்கும். அனைவரிடமும் அன்புமணி விரைவில் பேசுவாா். பாமக இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நிா்வாகிகள் இரு பிரிவிலும் இருக்கின்றனா். நடந்ததை மறந்து இனி ஒற்றுமையாக செயல்பட மருத்துவா் ராமதாஸும், அன்புமணியும் கலந்து பேசவேண்டும் என்றாா் ஜி.கே.மணி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இனி நல்லதே நடக்கும் : அன்புமணி நம்பிக்கை

சியாமா பிரசாத் முகா்ஜி படத்துக்கு மரியாதை

விடுதலையான பாம்பன் மீனவா்கள் பாஜக நிா்வாகிகளுடன் சந்திப்பு
‘தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனரை தினமும் சந்திக்கலாம்’
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



