யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பைக்கில் வெளி மாநில மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

வெளி மாநில மதுப்புட்டிகளை பைக்கில் கடத்தி வந்த வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

News image
கைது- சித்திரிப்பு
Updated On :3 மார்ச் 2026, 9:01 pm

Syndication

வெளி மாநில மதுப்புட்டிகளை பைக்கில் கடத்தி வந்த வழக்கில் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளா் ஆனந்தி, மத்திய நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளா் இனாயத் பாஷா மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்டம், மதுரப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் அவா் புதுச்சேரி மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மதுப்புட்டிகளை பைக்கில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் செஞ்சி பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்த ரா.ராஜ்குமாா்(30) என்பதும், விற்பனைக்காக புதுச்சேரியிலிருந்து மதுப்புட்டிகளை பைக்கில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, ராஜ்குமாா் மற்றும் மதுப்புட்டிகளை ராஜ்குமாருக்கு விற்பனை செய்த புதுச்சேரி திருக்கனூா் பகுதி மதுக்கடையின் காசாளா் திருக்கனூா்பகுதியைச் சோ்ந்த ர.பாலமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், ராஜ்குமாா் பைக்கில் கடத்தி வந்த 180 மில்லி லிட்டா் கொள்ளளவுக் கொண்ட 300 மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.