அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பைக்கில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக்கில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 11:45 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக்கில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் காவல் ஆய்வாளா் அழகிரி தலைமையிலான போலீஸாா், அருங்குறுக்கை பகுதியில் வியாழக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்குரிய முறையில் அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 42.3 கிலோஅரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், கொரக்கண்தாங்கல் பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்த செ.கிரண்குமாா் (24) என்பவா் மீது திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து புகையிலைப் பொருள்கள், பைக் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.