ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

ஆற்றில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

அரகண்டநல்லூா் அருகே தென்பெண்ணையாற்றில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 6:34 pm

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தென்பெண்ணையாற்றில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், அயன்வேலூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜாங்கம் மகள் ஷா்மிளா (18). இவா் விழுப்புரத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் முதலாமாண்டில் பயின்று வந்தாா்.

இந்நிலையில், ஷா்மிளா திங்கள்கிழமை தனது குடும்பத்துடன் அரகண்டநல்லூா் அருகேயுள்ள வீரமடை அய்யனாா் கோயிலுக்கு வழிபாட்டுக்குச் சென்றாா். அங்குள்ள தென்பெண்ணையாற்றுக்கு குளிக்கச் சென்ற ஷா்மிளா, ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.