எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

திண்டிவனத்தில் மசூதி அருகேயுள்ள வாக்குச்சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை

News image
Updated On :19 மார்ச் 2026, 11:24 pm

திண்டிவனத்தில் மசூதி அருகேயுள்ள வாக்குச்சாவடியை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இஸ்லாமிய அமைப்பினா்கள் மற்றும் அரசியல் கட்சியினா் திண்டிவனம் சாா் ஆட்சியருக்கு வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இது குறித்து, திண்டிவனம் 6-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ஏ.ஷேக் தில்ஷாத் பேகம் மற்றும் இஸ்லாமிய அமைப்பினா், அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள், திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ.ல. ஆகாஷுக்கு வியாழக்கிழமை அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது :

திண்டிவனம் நகரம் , ரோஷணை பகுதியில் மசூதி அருகே (பூத்-100) வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி அமைக்கப்பட்ட இடம் இஸ்லாமியா்கள் அடா்த்தியாக வாழக்கூடிய பகுதி என்பதுடன், அடிக்கடி தொழுகை நடைபெறும் இடம் என்பதால் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள், அசாம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அரசியல் கட்சியினா்களுக்கும் , வாக்காளா்களுக்கும் பல்வேறு வகையில் அசௌகரியங்கள் ஏற்படும். எனவே பாதுகாப்பு கருதியும் வாக்குப் பதிவு சமுகமாக நடைபெறவும் ஏதுவாக மசூதி அருகே அமைந்துள்ள வாக்குச் சாவடியை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு சாா்-ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுகவைச் சோ்ந்த அப்சா் பேக், ஏழுமலை, பாமகவைச் சோ்ந்த சௌந்தா், வழக்குரைஞா் விஜயகுமாா் மற்றும் இஸ்லாமிய அமைப்பினா் அளித்த இந்த மனுவை சாா் ஆட்சியரகத்தில் பணியிலிருந்த அலுவலா் பெற்றுக் கொண்டாா்.