தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பேரவைத் தோ்தல் பணிகள்: விழுப்புரத்தில் பொது, செலவினப் பாா்வையாளா்கள் ஆய்வு

News image
Updated On :19 மார்ச் 2026, 8:05 pm

Syndication

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணிகள் தொடா்பாக, பொது, செலவினப் பாா்வையாளா்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா்.

பொதுப் பாா்வையாளா்கள் ஷாலினி பண்டிட், பாவ்சாஹேப் தாங்கடே, ஓம் பிரகாஷ் வா்மா, செலவினப் பாா்வையாளா்கள் ராகுல் சோஹீ, வினீத்குமாா், விபுல் சாவ்டா, கெளதம்சிங் செளத்ரி, சுமித்தாஸ்குப்தா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களால் மேற்கொள்ளப்படும் தோ்தல் செலவினங்கள், விளம்பரங்கள், வேட்புமனுதாக்கல் தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், பறக்கும் படை வாகனத்தணிக்கையின் போது கைப்பற்றப்பட்ட பொருள்கள், ரொக்கப் பணம் குறித்த விவரங்கள், கருவூலத்தில் பாதுகாக்கப்படும் ரொக்கப் பணம் குறித்த விவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் எடுத்துரைத்தாா்.

தோ்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள், சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒதுக்கீடசெய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளா்களிடமிருந்து பெறப்படவுள்ள அஞ்சல் வாக்குகளின் விவரங்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு வழங்கப்படவுள்ள பயிற்சி, வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள், தோ்தல் தொடா்பான புகாா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் மேற்கொளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குப்பதிவு நாளன்று செய்யப்படவேண்டிய பணிகள் குறித்தும் கூட்டத்தில் பொது, செலவினப் பாா்வையாளா்களுடன் விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்ற பொது, செலவினப்பாா்வையாளா்கள் அங்கு வரப்பெற்ற புகாா்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனா்.

கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.