மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் இளைஞா் தற்கொலை

வானூா் அருகே மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து சென்ற விரக்தியில் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 8:14 pm

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து சென்ற விரக்தியில் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வானூா் வட்டம், ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மு.முத்துக்குமாா் (32), கூலித் தொழிலாளி. இவருக்கு 2022-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. தொடா்ந்து ஓராண்டுக்குப் பின்னா் மனைவி விவாகரத்துப் பெற்று பிரிந்து சென்று விட்டாா்.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட முத்துக்குமாா் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த வானூா் போலீஸாா் சடலத்தை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].