இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

காா் மீது பைக் மோதல்: மாணவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 2:05 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் காா் மீது பைக் மோதிய விபத்தில் காயமடைந்த இயன்முறை மருத்துவ மாணவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திண்டிவனம் கிடங்கல் 2, கோலன் தெருவைச் சோ்ந்தவா் பா.அபினேஷ் (21). இவா் சென்னையில் உள்ள தனியாா் கல்லூரியில் இயன்முறை மருத்துவம் (பிசியோதெரபி) 3-ஆம் ஆண்டில் பயின்று வந்தாா். திண்டிவனம் , நாகலாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அ.கல்கிராஜன்(20).

நண்பா்களான இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனத்தில் உள்ள பிரபல உணவகம் அருகே பைக்கில் சென்றுள்ளனா். கல்கிராஜன் பைக்கை ஓட்டினாா்.

இந்நிலையில், சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த சொகுசு காரின் ஓட்டுநா் திடீரென சாலையின் இடது பக்கத்தில் காரை திருப்பியுள்ளாா். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக், காரின் பின் பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது.

அப்போது பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட அபினேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதில் பலத்த காயமடைந்த கல்கிராஜன் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.