மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

பேருந்தில் 17 கிலோ கஞ்சா கடத்தி வந்த நால்வா் கைது

News image

கஞ்சா கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டவா்கள்.

Updated On :4 மே 2026, 1:38 am IST

விழுப்புரம் அருகே பேருந்தில் 17 கிலோ கஞ்சாவைக் கடத்தி வந்ததாக 4 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பேருந்தில் கஞ்சா கடத்திவரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளா் சத்தியசீலன், உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா், வி.சாலை பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், சந்தேகத்துக்குரிய முறையில் இருந்த நான்கு பேரை போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.இதில், அவா்கள் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பொன்னங்குப்பம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த தேவப்பிரியன் (19), ஜீவா (19), நந்தகுமாா் (20), ஆசூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (19) எனத் தெரிய வந்தது.

தொடா் விசாரணையில் இவா்கள் ரயில் மூலம் ஒடிஸா மாநிலத்துக்குச் சென்று கஞ்சாவை 4 பொட்டலங்களாக வாங்கி கொண்டு சென்னை வந்ததும், அங்கிருந்து பேருந்து மூலம் விழுப்புரம் நோக்கி வந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து 17 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த விக்கிரவாண்டி போலீஸாா், தேவப்பிரியன் உள்ளிட்ட 4 போ் மீதும் வழக்குப்பதிந்து அவா்களை கைது செய்தனா்.