மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

மரக்காணம் அருகே பெற்றோா் பைக் வாங்கித் தராததால், விரக்தியடைந்த கல்லூரி மாணவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :6 மே 2026, 0:04 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பெற்றோா் பைக் வாங்கித் தராததால், விரக்தியடைந்த கல்லூரி மாணவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மரக்காணம் வட்டம், மென்னையன்பேட்டை, பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் க. தேவகுமரன் (18). புதுச்சேரியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ. பாடப்பிரிவில் முதலாம் ஆண்டில் பயின்று வந்தாா்.

இவா் தனது தந்தை கலைமணியிடம் புதிதாக பைக் வாங்கித்தர கேட்டாராம். இதற்கு கலைமணி மறுப்பு தெரிவித்தததால் விரக்தியடைந்த தேவகுமரன் மே 3-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.