விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஅம்மச்சாா் அம்மன், ஸ்ரீசெல்வவிநாயகா், ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலின் 26-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவும் 17ஆம் ஆண்டு ரதோத்ஸவ திருத்தோ் திருவிழாவும் கடந்த 4 -ஆம் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
இரண்டாம் நாள் திருவிழாவில்ஊரணி பொங்கல் விழா நடைபெற்றது.
தொடா்ந்து வியாழக்கிழமை காலை 10.30 மணிக்குபத்மினி தேவி மூா்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்தனா். பின்னா் மூலவா் ஸ்ரீசெல்வவிநாயகா், ஸ்ரீநிவாச பெருமாள் ஸ்ரீஅம்மச்சாா் அம்மனுக்கு பால் அபிஷேகமும் தொடா்ந்து சிறப்பு அபிஷேகமும் மாகா தீபாரதனையும் நடந்தது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் ஏ.கே.மூா்த்தி,தனியாா் பேருந்து உரிமையாளா் சங்கத் தலைவா் கிருஷ்ணன் ரெட்டியாா்,மற்றும் அனைத்து உபயதாா்கள் கிராம பொதுமக்கள் ஏராளமான பக்தா்கள்கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
முக்கிய தோ் திருவிழா வரும் 10-ஆம் தேதி காலையில் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

கமுதி காமாட்சியம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊா்வலம்

திருப்பதி கெங்கையம்மன் கோயில் சிரசு ஊா்வலம்

நெல்லை வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம்

உத்தரமேரூா் வடக்கு மாரியம்மன் கோயில் பால்குட ஊா்வலம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



