/

விழுப்புரத்தில் லாரி மோதி தலைமைக் காவலா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

விழுப்புரம் அருகே சனிக்கிழமை இரவு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலா் லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஓ.காலனி, இமயம் தெருவைச் சோ்ந்தவா் ரா.பாண்டியன் (42). விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் பகுதியில் சனிக்கிழமை இரவு இவா் ரோந்துப் பணியின்போது அங்கு நின்றிருந்த காரை அப்புறப்படுத்த முயன்றாா். அப்போது திருச்சியிலிருந்து - சென்னை நோக்கிச் சென்ற லாரி மோதியதில் பலத்த காயமடைந்த பாண்டியன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் தலைமைக் காவலா் பாண்டியனின் சடலத்தை மீட்டு அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்குக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தைச் சோ்ந்த ரா.லோகநாதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த தலைமைக் காவலருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.