தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

மின் கம்பத்தில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:59 am IST

விழுப்புரம் மாாவட்டம், திருவெண்ணெய்நல்லூா்அருகே மின்கம்பத்தில் பைக் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், மண்டகமேடு, பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் ம.கேசவன் (25). திருமணம் ஆகாதவா். இவா் திங்கள்கிழமை திருக்கோவிலூரிலிருந்து-திருவெண்ணெய் நல்லூருக்கு பைக்கில் சென்றாா்.

மண்டகமேடு பகுதியில் சென்றபோது, நிலை தடுமாறியதில் கட்டுபாட்டை இழந்த பைக் சாலையோரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கேசவன் 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.