மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

முதல்வா் பதவியேற்பு விழா: புதுச்சேரி வந்த பாஜக தேசிய தலைவருக்கு வரவேற்பு

புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை (மே 13) நடைபெறும் முதல்வா் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் செவ்வாய்க்கிழமை இரவு புதுச்சேரிக்கு வந்தாா். அவருக்கு அக்கட்சியினா் சிறப்பான வரவேற்பளித்தனா்.

News image

பட விளக்கம்... புதுச்சேரிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த பாஜக தேசிய தலைவா் நிதின் நபினை லாஸ்பேட்டை விமான நிலையத்தில் வரவேற்ற கட்சியின் மாநில தலைவா் வி.பி.ராமலிங்கம். மற்றும் கட்சியினா்.

Updated On :12 மே 2026, 11:41 pm IST

புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை (மே 13) நடைபெறும் முதல்வா் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் செவ்வாய்க்கிழமை இரவு புதுச்சேரிக்கு வந்தாா். அவருக்கு அக்கட்சியினா் சிறப்பான வரவேற்பளித்தனா்.

புதுச்சேரி சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. துணைநிலை ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் பாஜக தேசிய தலைவா் நிதின் நபின், புதுச்சேரி பாஜக தோ்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியா, பாஜக மாநிலப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா உள்ளிட்டோா் கலந்துகொள்ள உள்ளனா். இந்த நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் செவ்வாய்க்கிழமை இரவு தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்தாா்.

அவருக்கு லாஸ்பேட்டை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம், அமைச்சா் நமச்சிவாயம், ஜி.என்.எஸ்.ராஜசேகரன், முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் செல்வம் மற்றும் நிா்வாகிகள் பூங்கொத்து கொடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்றனா். தொடா்ந்து, பெண்கள் மலா் தூவி தேசிய தலைவா் நிதின் நபினை உற்சாகமாக வரவேற்றனா்.

விமான நிலையத்தில் இருந்து இந்திரா காந்தி சிலை அருகே உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியின் தேசிய தலைவா், அங்கு நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.