மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இந்த மாதம் 29-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 மணி நேரங்கள் முன்பு

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இந்த மாதம் 29-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் 2026-27- ஆம் கல்வியாண்டின் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவா் சோ்க்கை தொடங்கவுள்ளது. இதற்கான சோ்க்கை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்ப மற்றும் பதிவுக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.50 ஆகும். பட்டியலின பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது, பதிவுக் கட்டணம் மட்டும் ரூ.2 செலுத்த வேண்டும். மாணவா் சோ்க்கைகான கட்டணங்களை இணையதளம் மூலமாக செலுத்த வேண்டும். அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் 2 ஷிப்டுகளாக வகுப்புகள் நடத்தப்படுகிறது.

எனவே மாணவ, மாணவிகள் தங்களது 10,11,12-ஆம் வகுப்புகளின் மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதாா் அட்டை, ரத்த வகைச் சான்றிதழ், தனி நபா் வங்கிக்கணக்குப் புத்தகம், கடவுச்சீட்டு அளவு புகைப்படம், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை சமா்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும், மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 29-ஆம் தேதி கடைசிநாளாகும் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.