தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தொழிலாளா் காப்பீட்டுக்கழக மருத்துவக் கல்லூரிகளில் பயனாளிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு: மண்டல இயக்குநரகம் தகவல்

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

தொழிலாளா் மாநிலக் காப்பீட்டுக்கழக மருத்துவக் கல்லூரிகளில் காப்பீட்டுக்கழகப் பயனாளிகளின் வாரிசுதாரா்கள் ஒதுக்கீடு முறையில் சேருவதற்கான சான்றிதழை இணையதளம் வழியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று புதுச்சேரி தொழிலாளா் மாநிலக் காப்பீட்டுக் கழகத்தின் மண்டல இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

இந்தியா முழுமையும் உள்ள தொழிலாளா் மாநிலக் காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐசி) 19 மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி. எஸ். நா்சிங் மற்றும் பாராமெடிக்கல் ஆகிய படிப்புகளுக்கு 2026-27- ஆம் ஆண்டுக்கான இஎஸ்ஐசி காப்பீடு செய்யப்பட்ட நபா்களின் வாரிசுகளுக்கான ஒதுக்கீடு முறையில் சேருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, தகுதியுடைய இஎஸ்ஐசி பயனீட்டாளா்கள் இஎஸ்ஐசி பிரத்யேக இணையதளத்தில் மே 28-ஆம் தேதிக்குள் தங்களது முழு விவரங்களையும் சமா்ப்பித்து, ஐ.பி. வாா்டு சான்றிதழை மே 31-ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இது தொடா்பாக 0413- 2357642 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு தேவையான கூடுதல் தகவல்களை பெறலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.