கட்டணங்களை வசூலிக்க எல்.ஐ.சி. கிளைகள் நாளை இயங்கும்!
காப்பீட்டுதாரர்கள் தங்கள் காப்பீட்டுக் கட்டணங்களைச் செலுத்துவதற்கு உதவும் வகையில், நாடு முழுவதும் உள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் கிளைகள் நாளை (மார்ச் 31) அன்று திறந்திருக்கும்.

LIC

LIC
புதுதில்லி: காப்பீட்டுதாரர்கள் தங்கள் காப்பீட்டுக் கட்டணங்களைச் செலுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் கிளைகள் நாளை (மார்ச் 31) திறந்திருக்கும்.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, மார்ச் 31 பொது விடுமுறையாகும்.
காப்பீட்டுதாரர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாதிருப்பதை உறுதிசெய்யும் வகையில், செவ்வாய்க்கிழமை(மார்ச் 31) ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் கிளைகளில் வழக்கமான அலுவல் பணிகள் நடைபெறும் என்று எல்.ஐ.சி. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மார்ச் 25, 2026 அன்று வெளியிட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக எல்.ஐ.சி. தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...