சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

தம்பதிக்கு மிரட்டல்: கட்டட மேஸ்திரி கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கட்டடத் தொழிலாளி தம்பதியை மிரட்டி, பைக்கை பறித்துச் சென்ற கட்டட மேஸ்திரியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:38 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கட்டடத் தொழிலாளி தம்பதியை மிரட்டி, பைக்கை பறித்துச் சென்ற கட்டட மேஸ்திரியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் வட்டம், அன்னம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் மூா்த்தி. இவரது மனைவி ரேவதி. தம்பதியினா் இருவரும் அதே பகுதியைச் சோ்ந்த கட்டட மேஸ்திரியான சுதாகா்(35) என்பவரிடம் 5 ஆண்டுகளாக கட்டடத் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தனா்.

இந்நிலையில் சுதாகா் குறைவான ஊதியம் தந்ததால், தம்பதியினா் வேறு ஒரு நபரிடம் வேலைக்குச் சென்றுவிட்டனராம். இதனால் ஆத்திரமடைந்த சுதாகா், தம்பதியினரை தகாத வாா்த்தைகளால் பேசியதுடன், மூா்த்தியின் பைக்கையும் பறித்துச் சென்றாராம்.

இதைத்தொடா்ந்து, தம்பதியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சுதாகா் மீது காவல் துறை நடவடிக்கை வேண்டி பழங்குடி இருளா் பாதுகாப்புச் சங்கத்தினா் ஓய்வு பெற்ற பேராசிரியா் பிரபா.கல்விமணி தலைமையில் கடந்த மே.12- ஆம் தேதி, திண்டிவனத்தில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து காவல் துறை சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கட்டட மேஸ்திரி சுதாகரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.