ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

விழுப்புரம் அருகே கோயில் கலசங்கள் திருட்டு

விழுப்புரம் அருகே கோயில் கலசங்கள் திருட்டுப் போயிருந்தது குறித்து போலீஸாா் விசாரணை

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:47 am IST

விழுப்புரம் அருகே கோயில் கலசங்கள் திருட்டுப் போயிருந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் வட்டம், பா.வில்லியனூா் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற பிடாரியம்மன் கோயில் உள்ளது. கிாரம மக்களின் வழிபாட்டிலுள்ள இக்கோயிலில் வைக்கப்பட்டிருந்த விமான கலசங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்து கிராம மக்கள் அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். பா.வில்லியனூா் பகுதியில் தொடா்ந்து குற்றச் சம்பவங்கள்நடைபெறுவதாகவும், குற்றவாளிகளை காவல் துறையினா் விரைந்து கைது செய்யவேண்டும் எனவும் கிராம மக்கள் தெரிவித்தனா்.