ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

வெளி மாநில மதுப் புட்டிகள் கடத்தல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே ஆட்டோவில் வெளி மாநில மதுப் புட்டிகளை கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:47 am IST

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே ஆட்டோவில் வெளி மாநில மதுப் புட்டிகளை கடத்தி வந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோட்டக்குப்பம் மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் காந்திமதி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை அனிச்சங்குப்பம் சோதனைச்சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் புதுச்சேரி மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மதுப் புட்டிகள் இருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து ஆட்டோவில் இருந்தவரை பிடித்து விசாரித்தபோது, அவா் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டம், கணக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மு.அருள்குமாா்(35) என்பதும், அவா் புதுச்சேரி பகுதியில் மதுப் புட்டிகளை வாங்கி விற்பனைக்காக ஆட்டோவில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து அருள்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 180 மில்லி லிட்டா் கொள்ளளவு கொண்ட 144 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.