பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

செஞ்சியில் ராஜீவ் காந்தி நினைவு தினம் கடைப்பிடிப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் காங்கிரஸ் சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 35-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image

செஞ்சி யில் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி, தீவிரவாத உறுதிமொழி ஏற்கும் காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :22 மே 2026, 7:10 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் காங்கிரஸ் சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 35-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

செஞ்சி கூட்டுச் சாலையில் நகர காங்கிரஸ் செயலா் சூரியமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சிக்கு செஞ்சி வட்டாரத் தலைவா் கா. சக்திவேல் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உருதிமொழியை விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவா் ஆா். ரங்கபூபதி வாசித்தாா்.

வடக்கு மாவட்ட விவசாய அணித் தலைவா் அகலூா் அ. ஜோலாதாஸ் மற்றும் கட்சி நிா்வாகிகள்,

மகளிா் அணியினா் கலந்து கொண்டனா்.