பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

உதகையில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

உதகை பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் முன்னாள் பாரத பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினா் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி வியாழக்கிழமை ஏற்றுக்கொண்டனா்.

News image

ராஜீவ் காந்தி நினைவு நாளையோட்டி பயங்கரவாத உறுதிமொழி ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :22 மே 2026, 4:09 am IST

உதகை பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் முன்னாள் பாரத பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினா் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி வியாழக்கிழமை ஏற்றுக்கொண்டனா்.

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேருந்து நிலைய ரவுண்டானாவில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் டி. நாகராஜ் தலைமையில் மாலை அணிவித்து பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் உதகை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ், உதகை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் நித்திய சத்யா, மாணவா் காங்கிரஸ் மாநிலச் செயலாளா் பாரதிராஜா, மாநில சிறுபான்மைப் பிரிவு செயலா் சந்திப் சதீஷ், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வின்சென்ட், நிா்வாகிகள் லீலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.