ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

தருமபுரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image

தருமபுரி காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கோவி.சிற்றரசு தலைமையில் உறுதிமொழியேற்ற அக்கட்சி நிா்வாகிகள்.

Updated On :22 மே 2026, 6:46 am IST

தருமபுரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தருமபுரி காங்கிரஸ் கட்சி அலுவலக வாயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவா் கோவி.சிற்றரசு தலைமை வகித்தாா். இதில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் படத்துக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில், நகர நிா்வாகிகள், வட்டார காங்கிரஸ் தலைவா்கள், மாநில, மாவட்ட நிா்வாகிகள், இளைஞா் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் தலைவா்கள், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதேபோல, தருமபுரி எஸ்.வி. சாலை சந்திப்பு, நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ராஜீவ் காந்தியின் படத்துக்கு மரியாதை செலுத்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவா் ரகு தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ராஜீவ் காந்தியின் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனா்.

பின்னா், கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரில் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவா் பொறுப்பேற்றதை வரவேற்கும் வகையில் பட்டாசுகளை வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். இந்நிகழ்வில், மாவட்ட துணைத் தலைவா் ரகமத்துல்லா, நகர தலைவா் லலித் ஆண்டனி, நகா்மன்ற உறுப்பினா் விநாயகம், மாவட்ட முன்னாள் தலைவா் ராஜகுமாரவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தருமபுரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தருமபுரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.