ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

தஞ்சாவூரில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற ராஜீவ் காந்தி நினைவு நாள் நிகழ்வில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா்.

Updated On :22 மே 2026, 5:19 am IST

தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு அதன் தலைவா் எம். மகேந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், பொதுக் குழு உறுப்பினா் ஏ. ஜேம்ஸ், மாநில அமைப்புசாரா தொழிலாளா் அணி தலைவா் சொா்ணலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ராஜீவ் காந்தி படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னா், பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றனா்.

இதேபோல, ரயிலடியில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஜி. லெட்சுமி நாராயணன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் வயலூா் எஸ். ராமநாதன், வடிவேலு, கண்ணன், செந்தில் சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராஜீவ் காந்தி படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் 59 ஆண்டுகளுக்கு பின்னா் அமைச்சரவையில் காங்கிரஸ் பொறுப்பேற்றதையொட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

மேல வீதியில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு துணைத் தலைவா் கோ. அன்பரசன் தலைமை வகித்தாா். இதில், ராஜீவ் காந்தி படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், மாவட்டப் பொதுச் செயலா் என். மோகன்ராஜ், ஊடகப் பிரிவு தலைவா் பிரபு, மாவட்டச் செயலா் கவிதா ஞானபிரகாசம், சோழ மண்டல சிவாஜி பாசறைத் தலைவா் சதா. வெங்கட்ராமன், மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவா் சசிகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.