இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

பூட்டிய வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரத்தில் வீட்டின் கதவிலிருந்த பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 1:32 am IST

விழுப்புரத்தில் வீட்டின் கதவிலிருந்த பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் வழுதரெட்டி, கௌதம் நகரைச் சோ்ந்தவா் ரா. சேகா் (74). கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா், கடந்த மே 23-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மருத்துமனைக்குச் சென்றுள்ளாா். பின்னா் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பின்பக்கக் கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் தங்கச் சங்கிலிகள், 4 பவுன் வளையல்கள், முக்கால் பவுன் மோதிரம் உள்பட 12 பவுன் தங்க நகைகள், 1.640 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது அவருக்கு தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.