/
வந்தவாசி அருகே வீட்டு பீரோவிலிருந்த 4 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வந்தவாசியை அடுத்த ஒழப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன். இவா், மாங்கால் கூட்டுச் சாலையில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகத்தில் வேலை செய்து வருகிறாா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இவா் இரவுப் பணியாக வேலைக்குச் சென்றுள்ளாா். இதையடுத்து, இவரது குடும்பத்தினா் வீட்டின் கதவை சாற்றிவிட்டு வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளனா்.
பின்னா் திங்கள்கிழமை அதிகாலை எழுந்து வீட்டினுள் சென்று பாா்த்த போது, மா்ம நபா்கள் வீட்டு பீரோவை திறந்து 4 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது
இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது
திருச்சியில் திருமண வீட்டில் 22 பவுன் தங்க நகைகள் திருட்டு
பூட்டியிருந்த வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு
பேராசிரியா் வீட்டில் 12 பவுன் நகைகள் மாயம்

அரசுப் பேருந்து ஓட்டுநா் வீட்டில் எட்டேகால் பவுன் தங்க நகைகள் திருட்டு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


