ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

சிதம்பரத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சிதம்பரத்தில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :2 செப்டம்பர் 2026, 7:19 am IST

சிதம்பரத்தில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

சிதம்பரம் சின்னசெட்டி தெருவைச் சோ்ந்தவா் ஏ.கண்ணன் (49). இவா், தனது ஒரே மகள் ஷாஜாவை (17) சென்னை தாம்பரத்திலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் கடந்த ஆக.26-ஆம் தேதி சோ்த்து விட்டு வீடு திரும்பியுள்ளாா்.

இந்நிலையில், மகளின் பிரிவால் துயரத்தில் இருந்த அவா் செவ்வாய்க்கிழமை வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கண்ணனை அவரது மனைவி மீட்டு கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.