மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழல்போல்
செய்யா வெண்ணீறாடீ செல்வா சிறு மருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமை ஏல் ஓர் எம்பாவாய்
பாடியவர் மயிலாடுதுறை சொ. சிவக்குமார்
</p><p align="justify"><strong>பாடியவர் சற்குருநாதன் </strong></p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/237672010&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"><strong>விளக்கம்</strong></p><p align="justify">மொய் = வண்டுகள். தடம் = அகன்ற. மொய்யார் தடம் பொய்கை = வண்டுகள் மொய்க்கும் அகன்ற குளம். மருங்குல் = இடை. எய்யாமல் = இளைத்து வருந்தாமல். இறைவன் செய்யும் ஐந்து தொழில்களும், அவன் எந்த சிரமும் மேற்கொள்ளாமல் செய்யப்படுவதால், விளையாட்டு என்று இங்கே கூறப்படுகின்றது, <br /> </p><p align="justify"><strong>பொருள்</strong></p><p align="justify">வண்டுகள் மொய்க்கும் குளத்தினில் புகுந்த நாங்கள், முகேர் என்ற ஒலி ஒலிக்குமாறு எங்களது கைகளால் குடைந்து குடைந்து நீராடுகின்றோம். சிவபெருமானை வணங்கி வழிபட்டு வரும் பரம்பரையில் வந்த நாங்கள் எப்போதும் உனது திருவடிகளின் பெருமையை நினைத்தபடியே வாழ்ந்து வருகின்றோம். இப்போதும் நீராடும் போதும் உனது திருவடிகளின் பெருமையினை பாடுகின்றோம். அணுகுதற்கு அறிய தீப்பிழம்பு போன்று செம்மையான நிறத்தை உடையவனே, திருநீற்றினை உடலெங்கும் பூசியவனே, வீடுபேறு எனப்படும் நிலையான செல்வத்தை உடையவனே, சிறிய இடையினையும், மை பூசியதும் அகன்று காணப்படுவதும் ஆகிய கண்களை உடைய பார்வதி தேவியின் மணாளனே, உனது திருவருளின் உதவியினால், உனது திருவிளையாடல் மூலம், வாழ்வினில் உய்வினை அடையும் அடியார்கள் பல படிகளைக் கடந்து முன்னேறுவது போன்று, நாங்களும் எங்களது வாழ்வினில் உன்னை எப்போதும் புகழ்ந்து பாடும் இந்த நிலையினை அடைந்துள்ளோம். நாங்கள் இனிமேல் பிறவிப் பிணியில் அகப்பட்டு, பல பிறவிகள் எடுத்து வருந்தி இளைக்காதவாறு நீதான் எங்களை காப்பாற்ற வேண்டும்.</p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?

கா்நாடக துணை முதல்வருடன் ஸ்டாலின் பிரசாரம் செய்வது துரோகம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

