அதிமுகவும், திமுகவும் தேர்தல் வந்தால், குடம், குடமாக கண்ணீர் வடிப்பார்கள். ஏழை, எளிய மக்களின், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவோம் என ஆதரவாகி பேசியும், வானாளவிய வாக்கறுதிகளை அளித்து வெற்றி பெற்ற பிறகு அதிமுகவும் சரி, திமுகவும் சரி வாக்குறுதிகளை மறந்துவிட்ட நிலபிரபுகளுக்கும், பெரிய முதலாளிகளுக்கும், கருப்ப சந்தைதாரர்களுக்கும், வரி ஏய்ப்பவர்களுக்கும், பதுக்கல்காரர்களுக்கும் சேவகம் செய்வார்கள். அடிப்படையில் இந்த இரு கட்சிகளும் பணக்கார வர்க்கத்தின் கட்சிகள்தான். தமிழக மக்கள் குறிப்பாக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் திமுக, அதிமுக ஆட்சி போதும் என முடிவு எடுத்துவிட்டனர்.