தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

யார் உண்மையான தேசியவாதிகள்? : கர்நாடக முதல்வர்

தேசிய விடுதலையில் பங்குபெற்றோர் யார்? - முதல்வர் சித்தாரமையா கேள்வி

News image

கர்நாடக முதல்வர் சித்தராமையா

Updated On :21 பிப்ரவரி 2024, 4:46 pm IST

கர்நாடக முதல்வர் சித்தாரமையா, பாரதிய ஜனதா கட்சி நாட்டுக்கான விடுதலை போராட்டத்தில் காங்கிரஸ் போல பங்கேற்கவில்லை என்றும் காங்கிரஸார் தான் உண்மையான தேசியவாதிகள் எனவும் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் முதல்வர், “நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள், சிறைக்கு சென்றவர்கள் உண்மையான தேசியவாதிகள் இல்லையா? எனில் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் தேசியவாதிகளா" என கேள்வி எழுப்பினார்.

மேலும், “பாஜக தேசிய விடுதலை போராட்டத்தில் பங்கேற்றதற்கான வரலாறு எதுவுமில்லை. நமது போராட்டத்தில் நாடு விடுதலை பெற்ற பிறகு அவர்கள் தங்களைத் தேசியவாதிகள் என சொல்லிக் கொள்கின்றனர். இந்திய வரலாறு யார் உண்மையான தேசியவாதிகள் யார் எனச் சொல்லும்” எனத் தெரிவித்தார்.

மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர் போஜ கவுடா இடைமறிக்க முயன்றபோது, "நீங்கள் மதச்சார்பற்று இருந்தால் இங்கே வாருங்கள். பிரிவினைவாதியாக இருந்தால் அங்கேயே இருங்கள்” எனத் தெரிவித்தார்.

கர்நாடக சட்டப் பேரவையில் ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்.12 தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.