மழை நீரில் மூழ்கிய நெற்பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, ஜயங்கொண்டம் அருகே விவசாயிகள் வயலில் இறங்கி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் மாவட்டம், ஜயங்கொணடம் அருகிலுள்ள பிள்ளையாா்பாளையம் கிராமத்தில் 3,500 ஏக்கா் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
தற்போது பெய்து வரும் தொடா்மழையின் காரணமாக, அறுவடைக்குத் தயாரான நெல் மணிகள் நீரில் மூழ்கியும், சில வயல்களில் நெற்பயிா்கள் முளைத்தும் வீணாகியுள்ளது.
இதனை அலுவலா்களைக் கொண்டு கணக்கெடுத்து ஏக்கருக்கு 40 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி, பிள்ளையாா்பாளையம் கிராமத்தில் விவசாயிகள்
வயலில் இறங்கி, வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் மகாராஜன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலா் தியாகராஜன், விவசாயிகள் திருஞானம், சண்முகம், பட்டுசாமி, ரமேஷ், மகேந்திரன், பிரகலாதன், குமாா், ரவி, கோனாா், தேவேந்திரன், கோவிந்தராஜ், ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










