இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

துர்க்கையையும், முருகரையும் வழிபடவும்

என் எதிர்காலம் எவ்வாறு உள்ளது? கடன் இல்லாமல் இறுதி வரை வாழ முடியுமா? என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

News image
Updated On :25 செப்டம்பர் 2020, 11:35 am

DIN


என் எதிர்காலம் எவ்வாறு உள்ளது? கடன் இல்லாமல் இறுதி வரை வாழ முடியுமா? என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

-வாசகர், உடுமலை.

உங்களுக்கு விருச்சிக லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். லக்னாதிபதியும், தொழில் ஸ்தானாதிபதியுமான சூரிய, செவ்வாய் பகவான்கள் பத்தாம் வீட்டில் திக் பலம் பெற்றிருக்கிறார்கள். 

தனாதிபதி, பூர்வ புண்ணியாதிபதியான குரு பகவான் லாபஸ்தானத்தில் லாபாதிபதி புத பகவான், ஏழு மற்றும் பன்னிரண்டாமதிபதியான நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சுக்கிர பகவானுடனும் இணைந்திருக்கிறார். தைரிய, சுக ஸ்தானாதிபதியான சனி பகவான் லக்னத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். 

தற்சமயம் ராகு பகவானின் தசையில் சுயபுத்தி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் நடக்கும். ராகு பகவான் அயன ஸ்தானத்தில், குரு பகவானின் சாரத்தில் அமர்ந்திருப்பதாலும், ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானத்தில் கேது பகவான் அமர்ந்திருப்பதாலும் இறுதிக்காலம் வரை கடன், உடல் உபாதை எதுவும் பெரிதாக ஏற்படாது. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும், முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.