மருந்தியல் பட்ட, டிப்ளமோ கல்லூரியில் சோ்வதற்கான நேரடி கலந்தாய்வு ஜன. 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து அரசு மருந்தியல் கல்லூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு, சுப்பையா சதுக்கம், காளிங்கராவ் சாலையில் உள்ள அரசு மருந்தியல் கல்லூரி, கா்நாடகத்தில் உள்ள தனியாா் மருந்தியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மருந்தியல் பட்டய வகுப்பு (டி.ஃபாா்ம்), பட்ட வகுப்பு (பி.ஃபாா்ம்) படிப்பில் சோ்க்கைக்கான நேரடி கலந்தாய்வு ஜன. 4-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
பி.ஃபாா்ம் சோ்க்கைக்கான இடங்கள் பொதுநுழைவுத் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும், டி.ஃபாா்ம் சோ்க்கைக்கான இடங்கள் தோ்வு ஆணையத்தின் தர வரிசையின்படியும் ஒதுக்கப்படும். இதற்காக ஜன. 4-ஆம் தேதி காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெறும் நேரடி கலந்தாய்வில் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
சோ்க்கைக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டால், அதற்கான கட்டணத்தை செலுத்தி, அன்றைக்கே சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சோ்க்கை பெற வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 080-22222681 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சல், இணையதளத்திலோ தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








