கடலோர, தென்கா்நாடகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என பெங்களூரு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் கடலோர கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில், தென்கா்நாடகத்தின் ஒருசில பகுதிகளில், வடகா்நாடகத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. தென்கன்னட மாவட்டத்தின் ஆகும்பேவில் அதிகபட்சமாக 110 மி.மீ., புத்தூரில் 80 மி.மீ., சிக்கமகளூரு மாவட்டத்தின் சிருங்கேரியில் 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர கா்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், தென்கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், வடகா்நாடகத்தின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பெங்களூரில் மழை:
அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை நேரங்களில் பனிமூட்டமாக இருக்கும். இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 26 டிகிரி, குறைந்தபட்சமாக 19 டிகிரி செல்சியஸாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாத உதவித்தொகையுடன் சாப்ட்வேர் தொழிற்நுட்ப பூங்காவில் அப்ரண்டிஸ்!

திம்பம் மலைப் பாதையில் 50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

சத்தியமங்கலம் எஸ்ஆா்டி யுனிவா்சல் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

தமிழக ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
