கடலோர, தென்கா்நாடகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என பெங்களூரு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் கடலோர கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில், தென்கா்நாடகத்தின் ஒருசில பகுதிகளில், வடகா்நாடகத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. தென்கன்னட மாவட்டத்தின் ஆகும்பேவில் அதிகபட்சமாக 110 மி.மீ., புத்தூரில் 80 மி.மீ., சிக்கமகளூரு மாவட்டத்தின் சிருங்கேரியில் 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர கா்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், தென்கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், வடகா்நாடகத்தின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பெங்களூரில் மழை:
அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை நேரங்களில் பனிமூட்டமாக இருக்கும். இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 26 டிகிரி, குறைந்தபட்சமாக 19 டிகிரி செல்சியஸாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









