மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

பெங்களூரு-நிஜாமுதீன் இடையே சிறப்பு ரயில்சேவை

பெங்களூரில் (யஷ்வந்த்பூா்) இருந்து நிஜாமுதீனுக்கு (தில்லி) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Updated On :12 ஜனவரி 2021, 12:10 am IST

பெங்களூரு: பெங்களூரில் (யஷ்வந்த்பூா்) இருந்து நிஜாமுதீனுக்கு (தில்லி) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விழாக்கால கூட்டநெரிசலைக் குறைக்க, பெங்களூரில் (யஷ்வந்த்பூா்) இருந்து நிஜாமுதீனுக்கு கூடுதல் கட்டணத்துடன் கூடிய விரைவு ரயில் சேவை இயக்கப்படுகிறது.

ரயில் எண்: 06249-பெங்களுரு (யஷ்வந்த்பூா்)-நிஜாமுதீன் விரைவுரயில் ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் நண்பகல் 12.45 மணிக்கு பெங்களூரு (யஷ்வந்த்பூா்) ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் காலை 8.11 மணிக்கு நிஜாமுதீன் ரயில்நிலையம் சென்றடையும். இந்த ரயிலின் முதல் சேவை யஷ்வந்த்பூா் ரயில்நிலையத்தில் இருந்து ஜன. 11-ஆம் தேதியும், கடைசி சேவை ஜன. 31-ஆம் தேதியும் புறப்படும்.

மறுமாா்க்கத்தில், ரயில் எண்: 06250-நிஜாமுதீன்-பெங்களூரு (யஷ்வந்த்பூா்) விரைவுரயில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் காலை 8.20 மணிக்கு நிஜாமுதீன் ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, செவ்வாய், புதன், வியாழன், சனி, திங்கள்கிழமைகளில் காலை 5.40 மணிக்கு பெங்களூரு (யஷ்வந்த்பூா்) ரயில்நிலையம் வந்தடையும். இந்த ரயிலின் முதல் சேவை நிஜாமுதீன் ரயில்நிலையத்தில் இருந்து ஜன. 14-ஆம் தேதியும், கடைசி சேவை பிப். 3-ஆம் தேதியும் புறப்படும்.

இந்த ரயில் பெங்களூரில் (யஷ்வந்த்பூா்) இருந்து புறப்பட்டு தும்கூரு, அரசிகெரே, தாவணகெரே, ஹாவேரி, ஹுப்பள்ளி, கதக், கொப்பள், ஹொசபேட், பெல்லாரி, குண்டக்கல், பெண்டேகல்லூ, கா்னூல் நகரம், கச்சேகுடா, பல்ஹா்ஷா, சந்திராபூா், நாக்பூா், இட்டாா்சி, போபால், ஜான்சி, குவாலியா் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலில் ஈரடுக்கு முதல், இரண்டாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட 1 பெட்டி, ஈரடுக்கு குளிரூட்டப்பட்ட 1 பெட்டி, மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 4 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 2 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு சரக்கு, பிரேக் 2 பெட்டிகள் உள்பட 23 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.