மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய உருக்கு ஆணையத்தின் (செயில்) பங்கு விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
மஹாரத்னா நிறுவனமான செயிலில் 5.82 சதவீத அளவிலான பங்குகளை ஏல முறையில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பங்குக்கான அடிப்படை விலை ரூ. 63 என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு விற்பனையின் மூலம் ரூ. 1,514 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
மொத்தம் 24.03 கோடி பங்குகள் ஏலத்துக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதி ஆண்டில் விற்பனைக்கு வரும் கடைசி அரசு நிறுவனப் பங்கு இதுதான். பல்வேறு அரசு நிறுவனங்களில் சிறிதளவு பங்கு விற்பனை மூலம் ஒட்டுமொத்தமாக ரூ. 24 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதிகபட்சமாக ரூ. 23,800 கோடிதான் திரட்ட இயலும் என கணக்கிடப்பட்டிருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் செயில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.484 கோடியாக இருந்தது. கடந்த ஐந்து நாட்களாக பங்குச் சந்தை நிலவரம் சாதகமாக இல்லாததால் செயில் பங்கு விற்பனை தொடங்கும் நாள் மற்றும் ஏலத்துக்கான அடிப்படை விலை நிர்ணயிப்பதில் அரசுக்கு சற்றே தயக்கம் இருந்துவந்தது. ஆயினும் நிதி ஆண்டு முடியுந்தருவாயில் இருப்பதால் மேலும் பங்கு விற்பனையை தாமதப்படுத்த தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலம் வல்லுறவு விவகாரம்: காவல் துறைக்கு தெரியாமல் நடந்திருக்குமா? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

”பாமக போட்ட பிச்சை!” சி.வி. சண்முகம் கடும் விமர்சனம்! | ADMK | EPS

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

உலகளவில் இரண்டாமிடம்... ரஷியாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


